Recent Post

Thursday, 11 September 2014

ஆஸ்கர் பிஸ்டோரியஸ் குற்றவாளி இல்லை: நீதிமன்றம் தீர்ப்பு



ஆஸ்கர் பிஸ்டோரியஸ் குற்றவாளி இல்லை: நீதிமன்றம் தீர்ப்பு

பிரிட்டோரியா,

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ், இரு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட இவர், ஒலிம்பிக்கில் சாதாரண வீரர்களுடன் சேர்ந்து பங்கேற்ற முதல் மாற்றுத்திறனாளி வீரர் என்ற பெருமை பெற்றவர்.

இவர் தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகனஸ்பர்க்கில் வசிக்கிறார். இவர் பிரபல மாடல் அழகி ரீவா ஸ்டீன்கேம்ப் என்பவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். 

இதையடுத்து இவர் மீதான வழக்கு தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா உயர்நீதிமன்ற நீதிபதி தோகோஷிலே மேடில்டா மாஸ்பா விசாரித்து வந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்து இருந்தார். இதன்படி இன்று  தனது நீளமான தீர்ப்பை அவர் வாசித்தார்

அதில் இந்த வழக்கில் அவர் குற்றவாளி இல்லை என்று கூறிய நீதிபதி,   துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது ஆனால் அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் பிஸ்டோரியஸ் சுடவில்லை என்றும் தெரிவித்துளார். 

பிஸ்டோரியஸ் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டதால்  ஆயுள் சிறை தண்டனையில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)

No comments:

Post a Comment

Like Us

Contact Form

Name

Email *

Message *